Monday, March 14, 2011

அம்மா

கடவுளை நேரில் காண
அனுமதி கிடைத்தது

குறிப்பிட்ட நேரத்தில்

குளித்து விட்டு சென்று இருந்தேன்

சிப்பந்தி சொன்னார்

கடவுள் தெய்வத்தை
வணங்கி கொண்டு இருக்கிறாரென்று

கடவுளுக்கே தெய்வமா ? யாரென்று
அறிய எட்டிப்
பார்த்தேன்

கடவுள்
சாஷ்டாங்கமாய் விழுந்து
வணங்கிகொண்டிருந்தார்
தன் தாயை

விரைந்தேன்
வீட்டுக்கு
என் தெய்வத்தை காண....


No comments:

Post a Comment