Monday, May 23, 2011

மறுபடியும் நனைந்தேன் ...!


மழையில் நனைந்துகொண்டே

வீட்டுக்கு வந்தேன்...!


குடை எடுத்துட்டுப் போகோ வேண்டியதுதனே,

என்றான் " என் தம்பி "


எங்கேயாவது ஒதுங்கி நிக்க வேண்டியதுதனே,

என்றாள் " என் தங்கை "


சளி பிடிச்சுகிட்டு செலவு வைக்கப்போறோ பாரு

என்றார் " என் அப்பா "


என் தலையை துவட்டிக் கொண்டே

திட்டினால் "அம்மா "

என்னையல்ல மழையை ...!


மறுபடியும் நனைந்தேன் என் அம்மாவின் அன்பு மழையில்...!

2 comments: