Thursday, June 28, 2012

முரண்...


அனைவரையும் கிண்டலடித்தேன்
- ஆனால்
என் திருமணத்தில்
போஸ் கொடுத்தேன்
புகைப்படக்காரர் சொன்னபடி...

Monday, April 23, 2012

முதல் பொய்

பேருந்தில் பயணிக்கையில்
வரும் செல்பேசி
அழைப்புக்களில்
" பக்கத்துல வந்துட்டேன்
இன்னும் பத்து நிமிடத்தில்
அங்க இருப்பேன் "
என்பதே
முதல் பொய்யாக 
இருக்கிறது....


Friday, February 24, 2012

KNOWLEDGE IS AMUSING

  1. FORTNIGHT comes from 'Fourteen Nights' (Two Weeks).
  2. POP MUSIC is 'Popular Music' shortened.
  3. MOPED is the short term for 'Motorized Pedaling'.
  4. BUS is the short term for 'Omnibus' that means everybody.
  5. DRAWING ROOM was actually a 'withdrawing room' where people withdrew after Dinner. Later the prefix 'with' was dropped...
  6. NEWS refers to information from Four directions N, E, W, and S.
  7. AG-MARK, which some products bear, stems from 'Agricultural Marketing'.
  8. QUEUE comes from 'Queen's Quest'. Long back a long row of people was waiting to see the Queen. Someone made the comment Queen's Quest.
  9. JOURNAL is a diary that tells about 'Journey for a day during each Day's business.
  10. TIPS come from 'To Insure Prompt Service". In the olden days to get Prompt service from servants in an inn, travelers used to drop coins in a Box on which was written 'To Insure Prompt Service". This gave rise to the custom of Tips.
  11. JEEP is a vehicle with a unique Gear system. It was invented during World War II (1939-1945). It was named 'General Purpose Vehicle (GP)'.GP was changed into JEEP later.
  12. Coca-Cola was originally green.
  13. The most common name in the world is Mohammed..
  14. The name of all the continents end with the same letter that they start with Asia, America, Australia, Europe
  15. The strongest muscle in the body is the TONGUE.
  16. TYPEWRITER is the longest word that can be made using the letters only on one row of the keyboard.
  17. Women BLINK nearly twice as much as men!!
  18. You can't kill yourself by holding your breath.
  19. It is impossible to lick your elbow.
  20. Wearing HEADPHONES for just an hour will increase the bacteria in your ear by 700 times.
  21. It is physically impossible for PIGS to look up into the sky.
  22. The "sixth sick sheik's sixth sheep's sick" is said to be the toughest tongue twister in the English language.
  23. Each KING in a deck of playing cards represents a great king from history.
    1. Spades - King David
    2. Clubs - Alexander the Great,
    3. Hearts - Charlemagne
    4. Diamonds - Julius Caesar.
  24. What do bulletproof vests, fire escapes, windshield wipers, and laser printers all have in common?
    1. Ans. - All invented by women.
  25. A CROCODILE cannot stick its tongue out.
  26. A SNAIL can sleep for three years.
  27. All POLAR BEARS are left-handed.
  28. BUTTERFLIES taste with their feet.
  29. ELEPHANTS are the only animals that can't jump.
  30. In the last 4000 years, no new ANIMALS have been domesticated.
  31. STEWARDESSES is the longest word typed with only the left hand.
  32. The human HEART creates enough pressure when it pumps out to the body to squirt blood 30 feet.
  33. Rats multiply so quickly that in 18 months, two rats could have over million descendants.
  34.  People say "BLESS YOU" when you sneeze because when you sneeze, your heart stops for a millisecond.
  35. If you SNEEZE too hard, you can fracture a rib. If you try to suppress a sneeze, you can rupture a blood vessel in your head or neck and die. So good to bless  sneezing person


Monday, August 15, 2011

காதல்

ஆணித்தரமாகக் காதலித்தேன் உன்னை
அதனால் தான் ஏனோ!
நெருப்பாக மாறினாய் நீ
என்னை உருக்குவதற்கென்று..!


நிலா

உலகை இன்று ஆளும் புதிய தலைமுறை
நிலவில் கொண்டாடும் கோடை விடுமுறை
வளரும் விஞ்ஞானம் புதிய நெறிமுறை
வானவேளியாவும் எங்கள் வகுப்பறை
- (உலகை)

நீலவட்டப் பாதையிலே ஆலவட்டப்
போடும் இந்த நிலா அது
ஓரிடத்தில் நில்லாதது..
பாடுபட்டு மானிடர்கள் பார்த்து
வந்த சங்கதிகள்
காவியத்தில் சொல்லாதது
காவியத்தில் சொல்லாதது..
- (உலகை)

நிலவை விழுங்குமாம் பாம்பு
அந்த பழைய கதையேதும்
இனி செல்லாது..
அப்பம் சுட்டு நிலவில் விற்கும்
அவ்வை பாட்டியேது
ஆம்ஸ்ட்ராங்கை கேளு
நீள் ஆம்ஸ்ட்ராங்கை கேளு..
கரடு முரடான வழியும்
துளி காற்றும் இல்லாத வெளியும்
கடன் வாங்கி முகம் காட்டும் மொழிழும்
கவிதை பொய்யென்று புரியும்
கவிதை பொய்யென்று புரியும்..
- (உலகை)

--
நன்றி
தூர்தர்ஷன் தொலைக்காட்சி


Wednesday, July 20, 2011

காதல்

நிலவுடனும்
பூவுடனும்
பட்டாம்பூசியுடனும்
தனிமையில் பேச கற்று தரும் இந்தக்
காதல்...
பெற்றோருடன் பேசுவதை மட்டும்
குறைத்து விடுகிறதே!!!

Friday, July 1, 2011

நேற்று இரவு நேரப் பயணத்தில்...!


நேற்று இரவு நேரப் பயணத்தில்,
எல்லோரும் உண்ணுவிட்டு உறங்க,

ஏனோ என் இமைகளும் மனமும்
உண்ணாவிரதம் இருந்து,
உறங்க மறுத்தன!!!

எதிர்ப்பார்ப்பு ஏமாற்றத்தைத் தருமாமே?
நம்பவில்லை நான்!
ஆறுதல் கூற உன்னை எதிர் பார்த்தபோது..!


அப்போது, என்னைக் கவிஞனாய் மாற்றியது
உன் பிரிவு தான் என்றாலும்,
இந்த உலகத்தில் கவிஞனுக்கா பஞ்சம்?
வெறும் மனிதனாகவே இருந்துவிடுகிறேன்..!

Wednesday, June 22, 2011

படித்ததில் பிடித்தது


அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....!!!! 


(அன்னையை பிரிந்து வேலைக்காக ஊர் விட்டு ஊர் வந்த ஒருவனின் மனதின் வலிகள் ) 

அம்மா... 
எழுத வார்த்தைகள் இல்லாமல் 
தொடங்குகிறேன்...!! 

பருவம் வரை பக்குவமாய் 
வளர்த்து விட்டாயே 

ஊர் சண்டை இழுத்து வந்தாலும் 
உத்தமன் என் பிள்ளை என்று 
விட்டு கொடுக்காமல் பேசுவாயே 
அம்மா..!! 

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய் 
தட்டி சென்ற நாட்கள்..!! 

செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு " 
போய்வாட என நீ சொல்ல 
இந்த வயதில் கடைக்கு போவதா?.. 
என நான் சொன்னேன்..!! 

இன்றோ.. 
இங்கே கண்ணுக்கு தெரியாத 
யாரோ ஒருவருக்காக ஓயாமல் 
வேலை செய்கிறேன் அம்மா..!! 

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும் 
உந்தன் கை பக்குவ உணவு 
நான் அறிந்த அமுதத்தின் அசல்தான். 
இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!! 

கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா 
சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல 
பத்து நிமிஷமா..!, நான் வெளியல 
சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி 
கிளம்பிய தருணங்கள்..!! 

இன்றோ.. 
இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு 
சாப்பிடும் போதே கண்கள் களங்க 
இன்று காரம் கொஞ்சம் அதிகம் 
போய்விட்டது என கடைக்காரர் 
சொல்ல..!! 

என்னக்கு மட்டும் தெரிந்த 
உண்மை..!! 
பாசமுடன் நீ அளித்த உந்தன் 
ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது 
ஏங்குகிறேன் அம்மா..!! 

அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள் 
வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய் 
தடவி விடும் எண்ணெய் துளிகள் 
வேண்டா வெறுப்பாய் நிற்கும் 
நான்..!! 

இன்றும் 
என் தலை முடி சகாராதான் அம்மா 
உந்தன் கை ஒற்றை எண்ணெய் 
துளிக்காக ஏங்கி நிற்கிறது..!! 

ஆசையால்.. 
மழையில் நனைந்து வர 
முனுமுனுத்தபடி துடைப்பாய் 
உந்தன் முந்தானையில் 

இப்போது நனைகிறேன் 
ஆசையால் அல்ல, ஏக்கத்தால்.., 

அத்தி பூக்கும் தருணமாய்..! 
என்றாவது ஒருநாள் என்னை 
திட்டும் நீ..! அந்த நொடியில் 
எதிர்த்து பேசினேனே அம்மா..!! 

இன்றோ.. 
இங்கே உயர் அதிகாரி திட்ட 
சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே 
அம்மா..!! 
என்னை மன்னித்துவிடேன் அம்மா..!! 

தொலைபேசியில்... 
உனக்காக, தேடி திரிந்து பார்த்து, 
பார்த்து வாங்கிய புடைவையை பற்றி 
சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள் 
வருமே..! கண்ணு உனக்காக 
ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது 
எடுத்துகிட்டு போடா என்று..!! 

எப்படி அம்மா சொல்வேன் எந்தன் 
அன்பையும் , எண்ணத்தையும் 

என் ஏக்கங்களை சொல்ல துடிக்க... 
கைபேசியை எடுத்து , அம்மா....என்று 
சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது 
எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு 
நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா 
இருக்க..!!! 

என் அன்னை ஆயிற்றே... 
எந்தன் ஒற்றை வார்த்தையில் 
புரிந்து கொள்வாய் எந்தன் 
மனதை..!! 

நான் சொல்ல மறந்த வார்த்தைகளை 
பக்குவமாய் பட்டியளிடுவாய்.., 
"வேலைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு " 
"மறக்காம எண்ண தேச்சி குளிடா" 
"ரோட்ல பத்திரமா பாத்து போடா" 
" உடம்ப பாத்துக்கோடா தங்கம் " 

என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும் 
என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே 
அம்மா..!! 

உன்னை என்னிடம் இருந்து பிரித்த 
இந்த வாழ்க்கையை திட்டுவதா..? 
இல்லை.. 
உந்தன் மேல் நான் வைத்திருக்கும் 
பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.? 
தெரியவில்லையே அம்மா..!! 

உனக்காக உயிரற்ற பொருட்களால் 
அன்பு சின்னம் அமைத்து என்ன 
பயன்..!! 

உதிரம் என்னும் பசை தடவி 
எலும்பு என்னும் கற்கள் அடுக்கி 
உன் அன்பின் சின்னமாய் இருப்பேன் 
அம்மா என்றும் உந்தன் 
காலடியில்...!!!